Tuesday, May 12, 2015

உலக செவிலியர் தினம் – மே 12



















புனிதமான தொழில்களில் முதன்மையானது செவிலியர் பணி. அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு கவனிப்பு, காயங்களைச் சுத்தப்படுத்தி மருந்து போடுதல், ஸ்பாஞ்ச் வைத்துக் குளிப்பாட்டுதல் உட்பட பல வேலைகளை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்பவர்கள்தான் செவிலியர்கள். ஆனால் அவர்களுக்கு முழுமையான பாராட்டுக்கள் கிடைப்பதில்லை.

நோயாளியைக் கவனிப்பதுடன் நோயாளியின் உறவினர்கள், விசிட்டர்கள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சக ஊழியர்களையும் செவிலியர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.
இன்றைய நவீன செவிலியப் பணியின் தாய் எனக் கருதப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்அவர்களின் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பொது மருத்துவமனைகளில் 60 பேருக்கு ஒரு செவிலியர் இருக்கிறார். அதனால் அவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
இத்தகைய சிறந்த சேவை புரியும் செவிலியர்களை நாமும் வாழ்த்திடுவோம்!

No comments:

Post a Comment