Monday, July 29, 2013

5வது மதுரை மாவட்ட மாநாடு 28-07-2013 அன்று மதுரையில் மாவட்டத் தலைவர் தோழர். C.விஜயரங்கன் தலைமையில் நடைபெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் தோழர்.M.லட்சம், மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.K.சேது,STR மாவட்டச் செயலர் தோழர்.P.ராஜகோபால், காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர்.V.மாரி, விருதுநகர் மாவட்டச் செயலர் தோழர். R.சக்கணன், விருதுநகர் கிளைச் செயலர் தோழர்.ரமேஷ்,நெல்லை ஓய்வூதியர் சஙக மாவட்டச் செயலர் தோழர். S. அருணாசலம், SNATTA, BSNLEU, AIBSNLEA, SNEA, AIBSNLOA, BSNLWRU, TEPU, SEWA ஆகிய சங்கங்களின் மாவட்டச் செயலர்கள், GM, DGM(HR), DGM(F) ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிட,மாநிலச் செயலர் தோழர். பட்டாபி சிறப்புரையாற்றினார்.
தலைவராக தோழர்.K.முருகேசன்,
செயலாளராக தோழர்.S.சிவகுருநாதன்,
பொருளாளராக தோழர்.R.ராஜேந்திரன்
ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்


Monday, July 1, 2013

தனது பாசமிகு, நேசமிகு தலைவனென்றாலும் பணி ஓய்வுக்குப் பின்னர் சங்கப் பொறுப்பில் தொடரக்கூடாது என்று சுட்டிக்காட்டிய கோவை தோழர்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்

Saturday, 29 June 2013
                                                      சமர்ப்பணம்
                 கீழ்க்கண்ட செய்தி எமது அருமை நண்பர்களின் கவனத்திற்கு சமர்பிக்கப்படுகிறது

                    
தோழர் முத்தியாலு பணி நிறைவு !

           தோழர் முத்தியாலு, 31-1-2006 அன்று 41 ஆண்டு இலாகாப் பணியை நிறைவு செய்தார்....

ஓய்வு பெற்றபின் சங்கப்பணியில் தொடரக் கூடாதென்ற உயர்ந்த கருத்தின் அடிப்படையில் மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகல் கடிதத்தை 10-2-2006 அன்று மாநிலச் செயலரிடம் வழங்கினார்.

தமிழ் மாநில மாநாடு மே திங்களில் நடந்திட பணிகள் துவங்கி விட்டதாகவும் பதவி விலகலை அற்புறுத்த வேண்டாமென்றும் மாநிலச் செயலர் வேண்டுகோள் விடுத்தார்.

பணி நிறைவிற்கு பிறகு சங்கப் பொறுப்பில் தொடர்வது சரியல்ல என்பதில் உறுதியாக இருப்பதால், பதவி விலகலை ஏற்கும்படி தோழர் முத்தியாலு வற்புறுத்தி உள்ளார்.  செய்தி கோவை மாவட்ட வலைத்தளம்.