Tuesday, December 10, 2013


”போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது”

  • தோழர். கிரி RM/VDS அவர்களுக்கு உடனடியாக மாற்றல் உத்தரவு வழங்கப்படும்.
  • Waiting list 1-ல் உள்ள தோழர்.பத்மநாபன் அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மாற்றல் உத்தரவு வழங்கப்படும் என DGM(HR) அவர்களின் எழுத்துவடிவிலான உறுதிமொழியின் அடிப்படையில் நாளை (11-12-2013)நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
       சுமூகமான தீர்வுக்கு உதவிய மாநிலச் சங்க நிர்வாகிகள் 

      தோழர்கள். முரளி, சென்னகேசவன் ஆகியோருக்கும்

      மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி. 
      போராட்ட களத்திற்கு தயாரான அனைத்து தோழர்கள்/  

     தோழியர்களுக்கும் நன்றி!

Sunday, December 8, 2013

கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றல் பிரச்னையில் காத்திருப்போர் பட்டியலை (Waiting List) புறந்தள்ளி விதிகளை மீறிய மதுரை மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து 11-12-2013 அன்று காலை 11 மணிக்கு GM அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அநீதி களைய அணி திரள்வீர் தோழர்களே!
  • டிசம்பர் 2 அன்று மாலை 3 மணிக்கு மதுரை GM அலுவலகத்தில் NFTE சங்க அலுவலக திறப்பு விழாவும்
  • மாலை 5 மணிக்கு தல்லாகுளம் CSC வாயிலில் சங்கத்தில் இணைந்திட்ட 63 தோழர்களை வாழ்த்தி வரவேற்ற விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
  

டிசம்பர் 2 மாலை 6 மணிக்கு தல்லாகுளம் CSC அருகில் நடைபெற்ற இணைப்பு விழாக் காட்சிகள்

Sunday, November 3, 2013

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

மதுரையில்  போனஸ் கோரி பட்டினிப் போராட்டம்
மாவட்டத் தலைவர் கே.முருகேசன், மாவட்டச் செயலர் எஸ்.சிவகுருநாதன்,STR மாவட்டச் செயலர் பி,ராஜகோபால் ஆகியோர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோழர்கள் சேது, மாநில துணைத் தலைவர் லட்சம், மாநில அமைப்புச் செயலர் விஜயரங்கன், திருமங்கலம் ராஜேந்திரன்,K.வேலுச்சாமி, ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் வி.கே பரமசிவம்(AIBSNLEA),தெய்வேந்திரன்(SNEA) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் நிறைவுரையாற்றி பட்டினிப்போரை ஜூஸ் கொடுத்து முடித்து வைத்தார்.