Sunday, March 23, 2014


இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் பகத்சிங்ராசகுருசுகதேவ் ஆகிய உண்மை யான மாவீரர்கள் தூக்க லிடப்பட்ட நாள் (1931)
பகத்சிங் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில். வழக்கம் போல் பெற்றோர் திருமண ஏற்பாட் டைத் தொடங்கினார்கள்.
பகத்சிங் என்ன சொன்னான் தெரியுமாஇது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்லஎன் உடல் உள்ளம்பொருள்ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.
சினிமாவே உலகம் என்றும் சீட்டி அடித்துக் கொண்டு திரியும் இளைஞர் கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்களாக!
நவஜவான் சபை ஒன்றையும் தொடங்கினான். அந்த அமைப்பில் உள்ளவர் கள் பூணூல்,நாமம்விபூதிப்பட்டைகுடுமிதாடிதலைப்பாகை முதலிய மதத் தொடர்புடைய அனைத்துச் சின்னங்களையும் தூக்கி எறிந்தனர்.
சிறைக் கொட்டடியில் தூக்குக் கயிறை முத்தமிட இருந்த அந்த நேரத்தில்,  சீக்கியரான சிறை அதிகாரி ஒருவர் சீக்கியர்களின் புனித நூலைக் கொடுத்துகடைசி நேரத்திலாவது பிரார்த்தனை செய் என்று கேட்டுக் கொண்டபோதுபகத் சிங் மறுத்து விட்டான்!
இளைஞர்களே எண்ணிப் பாருங்கள்

Thursday, March 20, 2014

அருமைத் தோழர்களே! தோழியர்களே!!
       வணக்கம். ஏப்ரல் 1ந்தேதி நடைபெறவிருக்கும் சென்னை சொசைட்டி தேர்தலில் NFTE + BSNLEU கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வீர்!


Tuesday, March 18, 2014

காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து
NFTE, BSNLEU, ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
NFTE மாவட்டத் தலைவர் கே.முருகேசன் தலைமையில் மதியம் 1 மணிக்கு GM அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. BSNLEU மாநில அமைப்புச்செயலர் செல்வின் சத்யராஜ், NFTE மாவட்டச்செயலர் சிவகுருநாதன், ஒப்பந்த ஊழியர் சோணைமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.BSNLEU மாவட்டச்செயலர் சூரியன் நன்றியரையாற்றினார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 28 வயதே நிரம்பிய இராஜா என்ற கூலித்தொழிலாளி காட்டுமிராண்டித்தனமாக பாதுகாப்பு படை 
கிங்கரன் ஒருவனால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். 
நியாயம் கேட்க சென்ற AITUC தோழர்கள்
 மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். 

எந்த அரசாக இருந்தாலும் , எந்த நிர்வாகமாக இருந்தாலும் தொழிலாளர்களைத் துன்புறுத்துவது என்பது 
இந்த தேசத்தில் தொடர்கதையாக உள்ளது.

 பாதுகாப்பு படை வீரர்களே ஊழியர்களின் பாதுகாப்பை அழிப்பது மாபாதக செயலாகும். இந்த காட்டுமிரண்டித்தனத்தை கடுமையாக கண்டிக்கின்றோம். 

Monday, March 17, 2014

இதயம் கணக்கும்.. 
கண்ணீர் அஞ்சலி! 

விருதுநகர் மாவட்டச்சங்கத்தின்
முன்னோடித்தோழரும் 
இயக்கத்தின் ஒற்றுமைக்காக
மாவட்டச் செயலர் பதவியை
விட்டுக் கொடுத்த

சிவகாசித்தோழர்.
ஜாபர் சாதிக் சேட் 

நேற்று 16/03/2014  இரவு 
மாரடைப்பால் காலமானார்.

அன்பு நிறைந்த சகோதரன்..
பண்பு நிறைந்த தோழன்..
இயக்கத்தில் உணர்வானவன்..
கொள்கையில் உருக்கானவன்..

நேற்று இரவு கலகலப்பாக 
அனைவரிடமும் கை குலுக்கிச்சென்றான் 
இன்றோ நம்மை கைவிட்டுச்சென்றான் 

ஈடு இணையில்லாத
அவனது மறைவு 
இயக்கத்திற்கு 
ஈடு செய்ய இயலாத.. இழப்பு..

கண்ணீரை மட்டுமே 
நம்மால் 
காணிக்கையாக்க  முடிகின்றது..