Sunday, September 30, 2012

வாழ்த்துகிறோம்:                 
  • மாநில அளவில் விசிஷ்ட் சஞ்சார் சேவா விருது பெற்ற அனைவருக்கும் மதுரை தோழர்.S.சீனிவாசகம்,TM அவர்களுக்கும்  NFTE-BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  •  அகில இந்திய அளவிலான பாரத் சஞ்சார் சேவா விருது பெற்ற தோழர்கள் N.சின்னச்சாமி TTA, G.ராஜராஜன் SDE ஆகியோருக்கு  NFTE-BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  •  தேசிய அளவில் சிறந்த பராமரிப்பு விருதைப் பெற்றுள்ள சேலம் மாவட்டத் தோழர்கள் அனைவருக்கும் NFTE-BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, September 28, 2012

IDA உயர்வு :

IDA 5.8% உயர்ந்துள்ளது.

( 61.5 + 5.8 = 67.3 ) 

01-10-2012 முதல் IDA 67.3%

Thursday, September 27, 2012

BSNL தின சலுகை :

 13வது BSNL தினத்தையொட்டி பிரிபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகளை மாநில நிர்வாகம் வழங்க உள்ளது.

 சலுகை காலம் : 01-10-2012 முதல் 07-10-2012 வரை

 
MRP of Top-up voucher/C-top-up/                               Usage value offered with Top-up voucher in Rs.
Flexi top-up in Rs. (incl. of S.Tax)
     200                                                                                    240     500                                                                                     600
  1000                                                                                   1200    6000                                                                                   7200
 உததரவு எண் : GM S & M-CM/165/RCVs& TOPUPs/2012-13/98 Dated @ Chennai-6 the 26.09.12
 

Saturday, September 22, 2012

 


புதிய அங்கீகார விதிகள்:

       ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம், அனைத்துச் சங்கங்களுக்கும் குறைந்தபட்ச தொழிற்சங்க சலுகைகள் என்ற கோரிக்கைகளுக்காக டெல்லியில் முதன்மை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற கூட்ட முடிவின் அடிப்படையில் BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்காக அனைத்துச் சங்கங்களின் கருத்துக்களை எழுத்து மூலம் அக்டோபர் 1ந்தேதிக்குள் தரவேண்டும் என நிர்வாகம் அனைத்து பொதுச்செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

Friday, September 21, 2012


20-09-2012 அன்று மதிய உணவு இடைவேளையில் GM அலுவலகம் முன்பாக சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வை திரும்ப்ப் பெறக் கோரியும்  , கேஸ் சிலிண்டரின் எண்ணிக்கையில் கட்டுப்பாட்டை நீக்க கோரியும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் தோழர்.K.முருகேசன் ( மாவட்டச் செயலர் NFTE ) தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் / மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் சூரியன் (BSNLEU), சந்திரசேகர் (SNEA), அருணாசலம் (AIBSNLEA), முத்துக்குமார் (FNTO), முருகன் (TEPU), பாலகுமார் (AIGEOTA), அழகுபாண்டியராஜா (SNATTA) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

18-09-2012 அன்று மதிய உணவு இடைவேளையில் GM அலுவலகம் முன்பாக ITS Absorbtion பிரச்னையில் நிர்வாகம் காட்டும் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் அனைத்துச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் தோழர்.K.முருகேசன் (மாவட்டச் செயலர் NFTE  ) தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் தோழர்கள் சூரியன் (BSNLEU), சந்திரசேகர் (SNEA), கருப்பையா (AIBSNLEA), முருகன் (TEPU), பாலகுமார் (AIGEOTA), குருசாமி (SEWA) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Thursday, September 13, 2012

  • TTA பயிற்சி வகுப்புகள் வரும் 17-09-2012, 24-09-2012  ஆகிய தினங்களில் மீனம்பாக்கம் ட்ரெயினிங் சென்டரில் 2 பேட்ச்களும் 01-10-2012 அன்று 2 பேட்ச்கள் மறைமலை நகர் ட்ரெயினிங் சென்ட்ரிலும் தொடங்க உள்ளது.
முயற்சி எடுத்த மாநிலச் சங்கத்திற்கும் மத்திய சங்கத்திற்கும் நன்றி!
தியாகத் தலைவனுக்கு அஞ்சலி:
 விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவரும், இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஏ.எம். கோபு, தனது 82 வது வயதில் சென்னை விஜயா மருத்துவமனையில் காலமானார்.
மறைந்த புகழ் மிகுந்த தோழர், ஏ.எம்.கோபு அவர்களுக்கு NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பிலும்  உறுப்பினர்களின் சார்பிலும் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
போர்க்குணமும், அர்ப்பணிப்பு மிகுந்த தியாகமும் கொண்ட கோபு  மாணவர், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று அனைத்து பகுதி மக்களுக்காகவும் தலைமை பொறுப்பு ஏற்று செயல்பட்டிருக்கிறார். இவர் பங்கேற்காத போராட்டங்களும் இல்லை. காலடி படாத தமிழ் நாட்டின் நிலப்பகுதியும் இல்லை.
தியாக, வாழ்க்கை சிறப்பைக் கொண்ட கோபு,  கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டக் காலத்தில், கொலைக் குற்றம் சாட்டப் பெற்று, காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர்.
திருவாரூரில் சுடப்பட்டு, ஒரு ஆண்டு பாதுகாப்பு கைதியாக, திருச்சி மத்திய சிறைச்சாலையிலும், மூன்று ஆண்டுகாலம் சேலம் மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
தோழர்கள் ஜீவா, எம்.கல்யாணசுந்தரம், ப.மாணிக்கம், ஏ.எஸ்.கே முதலான தலைவர்களோடு உடன் இருந்து பணியாற்றிய சிறப்பையும் பெற்றுள்ளார். ஓய்வு ஒழிச்சலற்ற கோபுவின் கட்சிக்கானப் பணி வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதன்று.
தமிழகத்தில் தொழிற் சங்கத்தைக் கட்டி அமைத்ததில் கோபுவின் பங்கு குறிப்பிட்டு சொல்லத்தக்கதாகும்.
AITUC தொழற்சங்கத்தில் மாநிலத்தின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தின் துணைத் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல், பணியாற்றியுள்ளார். இந்த காலத்தில் 98 நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
பலவேறு தொழிற் சங்கப்போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்று தந்துள்ளார்.

அவரின் உடல்  தோழர்களின் / மக்களின் அஞ்சலிக்குப்பிறகு அவரது  விருப்பப்படி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும்.





















































Tuesday, September 11, 2012

CHQ செய்திகள்:



78.2% IDA இணைப்பிற்கான கோப்பு DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


ஏற்கனவே நடைபெற்ற JAOPart-II தேர்வில் தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி நிர்வாகத்திற்கு மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.


ஏற்கனவே நடைபெற்ற TTA தேர்வெழுவதற்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை மீண்டும் தேர்வெழுத நிர்பந்திக்காமல் விலக்கு அளிக்க வேண்டும் என NFTE-BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
NE -12 ஊதிய விகிதத்திற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய விகிதம் ரூ.16390 - 33830
22-02-2012 தேதியிலிருந்து அமுலாக்கப்படும்.
உத்தரவு எண்: Corporate Office TE Section No: 27-7/2008-TE-II(Up-gradation) Dated 11-09-2012

Monday, September 10, 2012

       தமிழ் மாநில செயற்குழு
  •  மத்திய செயற்குழு உற்சாகத்துடன் நடந்து முடிந்த வேளையில்,
  • 78.2% IDA இணைப்பு BSNL Management Committee, BSNL Board இவைகளைக்கடந்து  DOTக்கு ஒப்புதலுக்கு செல்லும் வேளையில்
  • லேண்ட்லைன்/பிராட்பேண்ட் சரண்டரை தடுத்து புதிய இணைப்புகளை அதிகப்படுத்த நிர்வாகம்,தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில்
தமிழ் மாநில செயற்குழு வரும் அக்டோபர் 7ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை GM அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடைபெறவிருக்கிறது.
மாநில செயற்குழுவிற்கு வருகை தரும் மாநிலச் சங்க நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் அனைவரையும் மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாகவும் 4வது மாநில மாநாட்டின் வரவேற்புக்குழுவின் சார்பாகவும் வருக! வருக!! என வரவேற்கிறோம்
நம்பிக்கை தந்திட்ட கருத்தரங்கம்:
மதுரை SSAவில் 08-09-2012 அன்று நிர்வாகமும் அனைத்துச் சங்கங்களும் இணைந்து நமது தரைவழி / பிராட்பேண்ட்/ மொபைல் சேவை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள்/ஊழியர்கள் 150 பேர் பங்கேற்றனர்.
  • தயாரித்து வழங்கப்பட்ட 45 கேள்விகளுக்கு கலந்துகொண்ட அனைவரும் தங்களது பகுதியிலுள்ள அனைத்து அதிகாரிகள்/ஊழியர்களின் கருத்துக்களை எழுத்து மூலம் பதிவு செய்தனர்.
  • DGM(HR) துவக்கவுரை நிகழ்த்த அனைத்து மாவட்டச் செயலர்களும் அதிகாரிகளும்/ஊழியர்களும் விவாதத்தில் பங்கேற்றனர்.
  • மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் திரு.பிரபாகரன் அவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினார்.
இறுதியாக GM அவர்கள் தொகுக்கப்பட்ட கருத்துக்களுக்கு விளக்கமளித்து உரையாற்றினார். லேண்ட்லைன் சரண்டரை கூட்டாக சேர்ந்து தடுப்பது, பிராட்பேண்ட் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய இணைப்பு/ MNP மூலமாக மொபைல் எண்ணிக்கையை உயர்த்துவது, அதன் மூலம் மதுரை மாவட்ட வருவாயை உயர்த்துவது என நமது கடமையை இணைந்து செய்திடுவோம் எனக்கூறி கருத்தரங்கை நிறைவு செய்தார்.
இந்த கருத்தரங்கம் அதிகாரிகள்/ஊழியர்களிடையே ஒரு உத்வேகத்தை / இணைந்து பணியாற்றக்கூடிய சூழ்நிலையை  ஏற்படுத்தும், அதன்மூலம் மதுரை SSA வளர்ச்சியை நோக்கி  நடைபோடும் என்று நம்புகிறோம். 

Thursday, September 6, 2012

ஆளெடுப்பு விதிகள்(Recruitment Rules):

TTA ஆளெடுப்பு விதிகளுக்கு  BSNL போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. அதனடிப்படையில் 10+2 தகுதி இல்லாதவர்களுக்கு அதற்கான தகுதித் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

TM ஆளெடுப்பு விதிகளுக்கு BSNL போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரிக்குலேசன் அடிப்படை தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பென்சன் போராட்டம்:
செப்டம்பர் 2000 போராட்டத்தில் முதன்மையான கோரிக்கை BSNLல் சேர்ந்த பின்பும் அரசு பென்சன் தொடர வேண்டும் என்பது. அதுமட்டுமல்ல BSNLல் சேர்ந்த பின்பு ஏதோ ஒரு காரணத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் DOTல் பணிபுரிந்த காலத்திற்கான பென்சன் தரப்பட வேண்டும் என்பது உடன்பாடு.
அஎத உடன்பாட்டின் அம்சம் இதுவரை அமுலாக்கப்படவில்லை. தொடர்ந்து நமது மாநிலச் சங்கம் வற்புறுத்தியதின் விளைவாக மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியால் இன்று உத்த்ரவு வெளியாகியுள்ளது.
தோழர். குப்தாவின் தீர்க்கதரிசன, மனித நேய உடன்பாட்டை அமுலுக்கு கொண்டுவர பாடுபட்ட தமிழ் மாநிலச் செயலர் தோழர்.பட்டாபிக்கும் மத்திய சங்கத் தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
உள்ளே! வெளியே!!
12 ண்டுகளாக  ITS அதிகாரிகள், நமது BSNL நிறுவனத்திற்குள் வராமல் அடம்பிடித்துகொண்டு  தானடித்த மூப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்,இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் நமது நிறுவனமும், மேலும் ITS களுக்கு வலுசேர்க்கும் வகையில் DEPUTATION  நீடிக்கும் வகையாக
செயல்படுவது நமது நிறுவனத்தை சீரழிக்கவே பயன்படும்,
எனவே நிறுவனம் காக்க ஊழியர்கள்/ அதிகாரிகள் இணைந்து நடத்தும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 18-09-2012 அன்று நடத்த நமது அகில இந்திய தலைமை அறைகூவல் விடுத்துள்ளது

Monday, September 3, 2012


JAO Part II தேர்வு டிசம்பர் 17,18,19 தேதிகளில் நடைபெற உள்ளது.

TTA பயிற்சி வகுப்பு வரும் 10ம்தேதி துவங்க உள்ளது.