Thursday, May 1, 2014

இயற்கை தந்தது இருபத்து நாலு  மணி நேரம்…..

 இன்னுயிர் நீத்த தியாகிகள் தந்தது எட்டு  மணி நேரம்..

இன்றோ..
எட்டுமணி.. எத்தனையோ இடங்களில் எட்டாக்கனி..

இங்கு..
சமவேலை என்பார்.. சம ஊதியம் என்பார்..

ஆனால்..
சுமை வேலை சொல்வார் .. சுகமற்ற ஊதியம்  தருவார்..

இப்படி...
கிட்டிய உரிமைகள் எட்டிப்போகும் இழிநிலை பாரீர்..

இனி...
மோடிகள் ஆண்டாலும்.. லேடிகள்.. ஆண்டாலும் 
வாடி நிற்பது என்னவோ உழைப்பவனின் வயிறுதான்..

நமக்கும் கீழே வாடுபவர் கோடி...

அவர் வாட்டம் போக்கிட உயர்த்திடு  செங்கொடி...