Tuesday, March 18, 2014

காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து
NFTE, BSNLEU, ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
NFTE மாவட்டத் தலைவர் கே.முருகேசன் தலைமையில் மதியம் 1 மணிக்கு GM அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. BSNLEU மாநில அமைப்புச்செயலர் செல்வின் சத்யராஜ், NFTE மாவட்டச்செயலர் சிவகுருநாதன், ஒப்பந்த ஊழியர் சோணைமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.BSNLEU மாவட்டச்செயலர் சூரியன் நன்றியரையாற்றினார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 28 வயதே நிரம்பிய இராஜா என்ற கூலித்தொழிலாளி காட்டுமிராண்டித்தனமாக பாதுகாப்பு படை 
கிங்கரன் ஒருவனால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். 
நியாயம் கேட்க சென்ற AITUC தோழர்கள்
 மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். 

எந்த அரசாக இருந்தாலும் , எந்த நிர்வாகமாக இருந்தாலும் தொழிலாளர்களைத் துன்புறுத்துவது என்பது 
இந்த தேசத்தில் தொடர்கதையாக உள்ளது.

 பாதுகாப்பு படை வீரர்களே ஊழியர்களின் பாதுகாப்பை அழிப்பது மாபாதக செயலாகும். இந்த காட்டுமிரண்டித்தனத்தை கடுமையாக கண்டிக்கின்றோம். 

No comments:

Post a Comment