Monday, December 31, 2012

IDA உயர்வு

IDA 4.2% சதம் உயர்ந்துள்ளது. 
 67.3+4.2=71.5% ஜனவரி 2013 முதல்

Thursday, December 27, 2012

BSNL புதிய சங்க அங்கீகார விதிகள் அறிவிப்பு


நமது மத்திய மாநிலச் சங்கங்களின் அதிலும் குறிப்பாக அகில இந்திய தலைவர் இஸ்லாம், பொதுச்செயலாளர் சந்தேஷ்வர் சிங், நமது மாநிலச் செயலர் பட்டாபி ஆகியோரின் தொடர் முயற்சியால் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் தடைகளை தகர்த்தெறிந்து புதிய சங்க அங்கீகார விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநிலச் சங்கங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

Monday, December 10, 2012

வரவேற்புக்குழுக்கூட்டம்:

07-12-2012 அன்று வரவேற்புக்குழுக் கூட்டம் வரவேற்புக்குழு தலைவர் P.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. 

மாநிலச் செயலர் தோழர். பட்டாபி,மாநிலத் துணைத்தலைவர் குடந்தை ஜெயபால் கலந்துகொண்டு வரவேற்புக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.

தோழியர்கள்.இந்திராணிசுந்தர்ராஜ்,பரிமளம், தோழர்கள்.லட்சம்,விஜயரஙகன், சிவகுருநாதன், ராஜேந்திரன்,சிவசுப்பிரமணியன்,ராஜ்குமார்,ரகு மற்றும் கிளைச் செயலர்கள், மாவட்டச் சங்க நிர்வாகிகள்,முன்னணி தோழர்கள் கலந்துகொண்டனர். 

SNATTA மாநிலச் செயலர் P.அழகுபாண்டியராஜா கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.

முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன் மாநாட்டு நன்கொடையாக ரூ.20000/- கூட்டத்தில் மாநிலச் செயலரிடம் வழங்கினார். மாநில,மாவட்டச் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Thursday, December 6, 2012


டிசம்பர் 6 : டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரது பொன்மொழிகளை கடைப்பிடிக்க உறுதியேற்போம்.

·        முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம்முன்னேற்றத்தில் சிரத்தைசிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.
·        நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு;இரண்டாவது தெய்வம் சுயமரியாதைமூன்றாவது தெய்வம்நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
·        வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும்பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும்நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
·        எவனொருவன் தானே சரணடையாமல்மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல்எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன். 

Tuesday, December 4, 2012


மாவட்டச் செயலர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு 
ஒதுக்கப்பட்ட  மாநாட்டு நிதியினை விரைவில் அனுப்பிவைத்து வரவேற்பு குழுவிற்கு உதவுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்டச்செயலர்,  மதுரை தொலைதொடர்பு மாவட்டம்






1973 மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள்








  புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான முன்வரைவு (Draft Proposal) நிர்வாகத்தால் அனைத்துச் சங்கங்களுக்கும் தரப்பட்டு அதன்மீது கருத்துக்கள் கோரப்பட்டது.

NFTE,FNTO உட்பட 10 சங்கங்கள் இணைந்து தங்கள் கருத்துக்களை நிர்வாகத்திற்கு அளித்துள்ளன.

Saturday, November 24, 2012

நவம்பர் 24  சம்மேளன தின வாழ்த்துக்கள்.

கடை வரிசை தோழனின் உணர்வுகளை உள்வாங்கி இயக்கத்தை கட்டிவளர்த்த தோழர்கள் ஞானையா, குப்தா, ஜெகன், ஆர்.கே, தமிழ்மணி, மாலி , சேது, ஜெயபால், ஆர்.வி, கடலூர் ரகு ஆகியோரின் வழிநின்று பரந்துபட்ட ஜனநாயகப் பாதையில் வெகுஜன உணர்வுகளை மதித்து செயல்படும் மாநிலச் சங்கத்தை வலுப்படுத்த சம்மேளன தினத்தில் சபதமேற்போம்.

Wednesday, November 21, 2012

  • TM  கேடருக்கான இலாகா போட்டித் தேர்வை
நடத்த BSNL கார்ப்பரேட அலுவலகம் ஒப்புதல்
  அளித்துள்ளது.


  • NFTE மத்திய சங்கத்தின்  தொடர் முயற்சியின்
காரணமாக JTO கேடருக்கான இலாகா போட்டித் தேர்வையும் நடத்துவதற்கு BSNL கார்ப்பரே ட் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.


  • புதிய அங்கீகார விதிகள்:
BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான 2வது கூட்டம் 19-11-2012 அன்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் NFTE,FNTO உட்பட 10 சங்கங்கள் புதிய அங்கீகார விதிகளின்படிதான் 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை நடத்த வேண்டும் என நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டது.
BSNLEU,TEPU மற்றும் BSNLMS ஆகிய 3 சங்கங்கள் மட்டும் பழைய விதிகளின்படி தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரியது.
புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான முன்வரைவுதனை (Proposal) நிர்வாகம் சங்கங்களிடம் கொடுத்துள்ளது.
10 நாட்களுக்குள் அதாவது 29-11-2012ந் தேதிக்குள் சங்கங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
NFTE,FNTO உட்பட 10 சங்கங்கள் இணைந்து ஒருமித்த கருத்துக்களை நிர்வாகத்தின் முன்வைப்பது என முடிவெடுத்துள்ளது.  

Saturday, November 17, 2012

  • 78.2% IDA ஊதிய நிர்ணயம்:
       DOT கேட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை BSNL  
       கார்ப்ரேட் அலுவலகம் 15ந்தேதி DOTக்கு
      அனுப்பியுள்ளது. 


  • JAO Part-II தேர்வு குறித்த தேதிகளில் நடைபெறும்.

Friday, November 16, 2012

  • புதிய அங்கீகார விதிகள்:
     BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான 2வது கூட்டம் வரும் 19-11-2012 அன்று டெல்லியில் மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

Monday, November 12, 2012

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்


தீபாவளி என்பது அரக்கனை அழித்த திருநாள் என்கிறது புராணம்.

இந்தப் பண்டிகை மனிதர்களுக்கு சொல்லும் செய்தி,நம் மனதிலிருக்கும் அரக்க குணங்கள், விலங்கு குணங்கள், தீய எண்ணங்கள் போன்ற இருளை அகற்றி.. அன்பு, வாய்மை போன்ற நல்ல குணங்களை மனங்களில் இருத்தினால், ஒளிமயமான வாழ்வு வாழலாம் என்பதுதான்!

அதுதான் இப்பண்டிகையின் அடிப்படை சித்தாந்தம்.

Monday, November 5, 2012


வெற்றிகரமாக நடந்து முடிந்த 6நாள் தொடர் உண்ணாவிரதம் 

  • BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகளை உடனடியாக BSNLஐ விட்டு வெளியேற்ற வேண்டும்.
அல்லது
  • BSNLல் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் ஊழியர்களையும் திரும்பவும் மத்திய அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 
 FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக நடைபெற்ற 6வது நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் வெற்றிகரமாக  நடைபெற்றது. அனைத்துச் சங்கங்களிலிருந்தும் பெருவாரியான தோழர்கள்,தோழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

  

Tuesday, October 30, 2012

BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகளை உடனடியாக BSNLஐ விட்டு வெளியேற்ற வேண்டும்.
அல்லது
BSNLல் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் ஊழியர்களையும்  மத்திய அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 

30-10-2012 அன்று FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக 2வது நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் தல்லாகுளம் Level IV  வளாகத்தில்  நடைபெற்றது

தோழர். K.முருகேசன் தலைமையேற்க தோழர் N.அழகர்சாமி துவக்கி வைக்க, தோழர்கள். செல்வின் சத்தியராஜ், G.P.பாஸ்கரன், M.சந்திரசேகரன்,  குருசாமி,V.K.பரமசிவம், அருணாசலம், கருப்பையா, அருணோதயம், வைரமதி, சுந்தரராஜன், செல்லப்பாண்டியன்(TEPU )  சூரியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இன்று (30-10-2012) மதியம் 12 மணிக்கு மாண்புமிகு அமைச்சர் கபில்சிபல் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கையில் தீர்வு ஏற்படவில்லை. அதனால் போராட்டம் தொடர்கிறது






Tuesday, October 16, 2012

16-10-2012 அன்று மதியம் 1 மணிக்கு GM அலுவலகம் முன்பாக தொடர் மின்வெட்டைக் கண்டித்தும் குறைந்த பட்ச போனஸ் வழங்கக்கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. GM அலுவலகக் கிளைச்செயலர் மெஹ்ராஜூதீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் BSNL நிர்வாகத்தைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


15-10-2012 அன்று FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக தர்ணா போராட்டம் GM அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
தோழர். K.முருகேசன் DS/NFTE தலைமையேற்க தோழர் N.அழகர்சாமி ACS/SNEA துவக்கி வைக்க, தோழர்கள். அ. அருணாசலம்,N.V.சந்திரசேகர் /AIBSNLEA,V.பாலகுமார்,விஜய்பாபு/AIGETOA , S.சூரியன் கன்வீனர்,செல்வின் சத்தியராஜ்/BSNLEU M.சந்திரசேகரன்/SNEA, G.P.பாஸ்கரன்,L.கண்ணன், V.சூரப்பன்,M.சுந்தரம்,தோழியர்கள் உமா, அருணோதயம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்..தோழர்.V.K.P/AIBSNLEA நிறைவுரை ஆற்றினார். தோழர்.சு.கருப்பையா DS/AIBSNLEA நன்றியுரையாற்றினார்.

Saturday, October 13, 2012

IDA உயர்வு:

01-10-2012 முதல் 5.8% IDA உயர்வுக்கான உத்தரவு

வெளியிடப்பட்டுள்ளது.

2012 அக்டோபர்  மாத சம்பளத்தில் IDA 67.3% 

Friday, October 12, 2012

ITS அதிகாரிகளை BSNLலிருந்து வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

11-10-2012 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் FORUM தலைவர் K.முருகேசன் DS/NFTE தலைமையில் நடைபெற்றது.





Wednesday, October 10, 2012

TTA பயிற்சி வகுப்பு

22-10-2012 அன்று TTA பயிற்சி வகுப்பு மீனம்பாக்கம் RGM TTCயில் துவங்கவிருக்கிறது.
TTA  தேர்வு 06-01-2013 அன்று நடைபெறும்.
(2011 ஆளெடுப்பு ஆண்டிற்கானது)  
கல்வித் தகுதி   : 10+2
சேவைக்காலம்: 01-07-2011 அன்று 5 வருட சேவை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2012
மதுரை மாவட்டத்தில் காலியிடங்கள்:
OC   :5  SC   :14   ST:6   PH: 2
தேர்வு விதிமுறைகள்:
இரண்டு பிரிவுகளாக வினாக்கள் கேட்கப்படும்.
1. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன்ஸ்
2. இலாகா நடைமுறைகள்
ஒவ்வொரு பிரிவிற்கும் 50 மதிப்பெண்கள், மொத்தம் 100
·        தவறான விடைக்கு அதற்கான மதிப்பெண்ணின் 25 சதம் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்ணிலிருந்து கழிக்கப்படும்.

Tuesday, October 9, 2012

தமிழ் மாநில செயற்குழு - மதுரை - 07-10-2012

வரும் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திட
பயனுள்ள விவாதங்கள், சிறந்த ஆலோசனைகள்,
வரவேற்புக்குழுவிற்கு ஊக்கம்  தந்திட்ட 
மாநில செயற்குழு.

செயற்குழுவில் நெல்லை  முன்னாள்  மாவட்டச் செயலர்
தோழர்.K.ராமகிருஷ்ணனுக்கு  பணி ஓய்வு பாராட்டு

தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை முழுமையாக தந்திட்ட, பகுதியைத் தந்திட்டு மீதியை இம்மாதத்திற்குள் தந்திடுவோம் என்று உறுதியளித்த அனைத்து மாவட்டச் செயலர்களுக்கும் மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பாகவும் வரவேற்புக்குழுவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றி. 

Thursday, October 4, 2012

2012- 2013ம் ஆண்டில் BSNL வருமானத்தை ரூ.30,000 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக CMD திரு. உபாத்யாயா Business Today இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
திருப்பித்தரப்பட்ட BWA ஸ்பெக்ட்ரத்திற்கான தொகை ரூ.6724.51 கோடியை BSNLக்கு திருப்பித்தருவதற்கான ஒப்புதலை DOT நிதியமைச்சகத்திடம் கேட்டுள்ளது.

Tuesday, October 2, 2012

காந்தி இன்றும் தேவைப்படுகிறார்
இன்றைய இந்தியாவில் காந்தி, காந்தியிஸம் என்று ஏதாவது எஞ்சியிருக்கிறதா?
இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு வெளியில் காந்திய மரபு இருக்கத்தான் செய்கிறது.
தொழில் துறை வளர்ச்சியால் ஏற்படும் அத்துமீறல்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தீவிரமான சுற்றுச் சூழல் அமைப்பு உருவாகியிருக்கிறது.
மரபுசாரா எரிசக்தியையும் சிறிய அளவிலான பாசனத் திட்டங்களையும் இந்த இயக்கங்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்கின்றன. இந்தச் சுற்றுச் சூழலியலாளர்கள் தங்கள் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் இரண்டாம் தேதியன்று தொடங்குகின்றனர் அல்லது முடிக்கின்றனர்.
பெண்ணிய, மனித உரிமை வட்டாரங்களிலும் காந்தியின் தாக்கம் இருக்கிறது. இடதுசாரி அரசியல் சிந்தனைகளிலிருந்து பெற்ற உத்வேகத்துடன் காந்தியின் தாக்கமும் இவர்களுக்கு இருக்கிறது.
மருத்துவர்களும் ஆசிரியர்களும் தங்கள் நகர்ப்புற வீடுகளை விட்டுவிட்டுக் கிராமப்புறங்களுக்குச் சென்று பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நடத்துகிறார்கள்.
இன்றைய உலகில் காந்தியிடமிருந்தும் காந்தியின் கொள்கைகளிலிருந்தும் நாம் எவற்றையெல்லாம் பின்பற்ற முடியும்?

நான்கு விஷயங்களில் காந்தியின் சிந்தனைக்கு இன்னும் முக்கியத்துவம் இருக்கிறது.
முதலாவதாக, சுற்றுச்சூழல். சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எழுச்சி இதுவரை அடக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு (காந்திய) கேள்வியை நம்முன் நிறுத்துகிறது. அதாவது, ஒரு மனிதன் எவ்வளவு நுகரலாம்? நவீன வாழ்க்கைமுறையை மேலை நாடுகள் மட்டும் பின்பற்றிக்கொண்டிருந்த வரையில் இந்தக் கேள்வி எழவில்லை. பெரும்பாலான அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும்போல இந்தியர்களும் சீனர்களும் தங்களுக்கென ஒரு காரை வைத்துக்கொள்ள ஆரம்பித்தால் பூமி அந்தச் சுமையைத் தாங்காது. 1928லேயே மேலைநாட்டு முறையிலான உற்பத்தியையும் நுகர்வையும் உலக அளவில் தாங்க முடியாது என்பதைப் பற்றி எச்சரித்தார் காந்தி.
இரண்டாவதாக, கடவுள் நம்பிக்கை. கடவுளே இருக்கக் கூடாது என்று சொல்லும் மதச்சார்பற்றவர்களும் சரி, தங்களின் கடவுள்தான் ஒரே உண்மையான கடவுள் என்று நினைக்கும் மதவாதிகளும் சரி, காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். இதுதான் உண்மை என்று எந்த மதத்தையும் சொல்ல முடியாது என்று நம்பினார் காந்தி. ஒருவர் தான் பிறந்த மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் (எனவே, மதமாற்றத்தை அவர் ஏற்கவில்லை). ஆனால், அம்மதத்தை அவர் மிகவும் பரந்த மனத்துடனும் அஹிம்சை முறையிலும் அணுக வேண்டும் என்று வாதிட்டார் காந்தி. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பதை அவர் வெகுவாக ஊக்குவித்தார். அவருடைய மிகச் சிறந்த நண்பராக இருந்த சி.எஃப். ஆண்ட்ரூஸ்கூட ஒரு கிறிஸ்தவப் பாதிரியார்தான். அவரது ஆசிரமத்தில் தினமும் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெவ்வேறு மதப் புத்தகங்களிலிருந்து வாசகங்கள் வாசிக்கப்படும் அல்லது பாடல்கள் பாடப்படும். அந்தக் காலகட்டத்தில் அவரது நடவடிக்கைகள் விநோதமாகப் பார்க்கப்பட்டன. இப்போது திரும்பிப் பார்க்கையில் அது முன் உணர்ந்த நடவடிக்கையாகவே தோன்றுகிறது. மதரீதியான மோதல்கள் உலகம் முழுவதும் இருக்கும் நிலையில், இம்மாதிரி நடவடிக்கைகள் பரஸ்பர அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற உதவும்.
மூன்றாவது, சத்தியாகிரகம். அஹிம்சையின் மூலம் அடையப்பட்ட சமூக மாற்றம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை எல்லோரும் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். ஃப்ரீடம் ஹவுஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜனநாயக ஆட்சி முறைக்கு மாறிய 60 நாடுகளைப் பற்றி ஆராய்ந்தார்கள். "பரந்த, அகிம்சை முறையிலான புறக்கணிப்பு, பெரும் எதிர்ப்புப் பேரணிகள், வேலை நிறுத்தங்கள், ஒத்துழையாமை போன்ற குடிமக்களின் எதிர்ப்புகள்தான் சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆதரவுத் தளத்தையும் அவர்களது ராணுவத்தின் விசுவாசத்தையும் தகர்த்தன." என்று அவர்கள் கண்டறிந்தனர். இந்த வழிமுறைகள் எல்லாமே காந்தியால் முதலில் பயன்படுத்தப்பட்டவை.
நான்காவதாக, பொது வாழ்க்கை. "ஒரு அரசியல்வாதியாக மட்டுமே அவரை அணுகி மற்ற முன்னணி அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டால் அவர் எவ்வளவு சுகந்தமான வாசனையை விட்டுச்சென்றிருக்கிறார்" என்று தன்னுடைய ரிஃப்ளக்ஷன்ஸ் ஆன் காந்தி (Reflection on Gandhi) நூலில் குறிப்பிட்டார் ஜார்ஜ் ஆர்வெல். பயங்கரவாதம் தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகள் காந்தியைப் போல வெளிப்படையான ஒரு வாழ்வை வாழ முடியாது. அவரது ஆசிரமத்திற்கு வெளியில் பாதுகாவலர்கள் யாரும் கிடையாது. எந்த நாட்டையும் தொழிலையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் அவர்கள் விரும்பிய நேரத்தில் ஆசிரமத்திற்குள் செல்லலாம். இன்றைய அரசியல்வாதிகளும் (சமூகப் போராளிகளும்) காந்தியின் ஒளிவுமறைவு இன்மையைக் கடைபிடிக்க முயற்சியாவது செய்யலாம். ஒத்துழையாமைப் போராட்டம் என்றால் அது பற்றி முன்பே அறிவித்துவிடுவார். தன்னுடைய சமூகப் பரிசோதனைகளைப் பற்றித் தன்னுடைய நாளிதழில் விரிவாக விளக்குவார். அருகிலேயே அவரது விமர்சகர்களின் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும்.  
 

Monday, October 1, 2012


BSNL Formation Day : 01-10-2012

BSNL துவங்கும்போது முகாரி ராகம் பாடியவர்களின் முகத்திரை கிழித்து 13வது ஆண்டைநோக்கி வெற்றி நடைபோடுகிறது.

NFTE-BSNL அரசின் கொள்கை, அரசியல்வாதிகளின் தனியார்கம்பெனி ஆதரவு, அந்நிய கம்பெனிகளின் சதி, BSNL நிர்வாகத்திலுள்ள சில அதிகாரிகளின் அக்கரையற்ற தன்மை ,அலட்சியம் இவைகளுக்கெதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி BSNLஐ 13வது ஆண்டை நோக்கி  பீடுநடைபோட வைத்துள்ளது.

BSNLஐ பாதுகாப்பதில் NFTE-BSNL தொடர்ந்து முன்னிற்கும்.

வலுவான NFTE , வளமான BSNL

 என்பதை தொடர்ந்து செயல்படுத்துவோம்.

Sunday, September 30, 2012

வாழ்த்துகிறோம்:                 
  • மாநில அளவில் விசிஷ்ட் சஞ்சார் சேவா விருது பெற்ற அனைவருக்கும் மதுரை தோழர்.S.சீனிவாசகம்,TM அவர்களுக்கும்  NFTE-BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  •  அகில இந்திய அளவிலான பாரத் சஞ்சார் சேவா விருது பெற்ற தோழர்கள் N.சின்னச்சாமி TTA, G.ராஜராஜன் SDE ஆகியோருக்கு  NFTE-BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  •  தேசிய அளவில் சிறந்த பராமரிப்பு விருதைப் பெற்றுள்ள சேலம் மாவட்டத் தோழர்கள் அனைவருக்கும் NFTE-BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, September 28, 2012

IDA உயர்வு :

IDA 5.8% உயர்ந்துள்ளது.

( 61.5 + 5.8 = 67.3 ) 

01-10-2012 முதல் IDA 67.3%

Thursday, September 27, 2012

BSNL தின சலுகை :

 13வது BSNL தினத்தையொட்டி பிரிபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகளை மாநில நிர்வாகம் வழங்க உள்ளது.

 சலுகை காலம் : 01-10-2012 முதல் 07-10-2012 வரை

 
MRP of Top-up voucher/C-top-up/                               Usage value offered with Top-up voucher in Rs.
Flexi top-up in Rs. (incl. of S.Tax)
     200                                                                                    240     500                                                                                     600
  1000                                                                                   1200    6000                                                                                   7200
 உததரவு எண் : GM S & M-CM/165/RCVs& TOPUPs/2012-13/98 Dated @ Chennai-6 the 26.09.12
 

Saturday, September 22, 2012

 


புதிய அங்கீகார விதிகள்:

       ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம், அனைத்துச் சங்கங்களுக்கும் குறைந்தபட்ச தொழிற்சங்க சலுகைகள் என்ற கோரிக்கைகளுக்காக டெல்லியில் முதன்மை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற கூட்ட முடிவின் அடிப்படையில் BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்காக அனைத்துச் சங்கங்களின் கருத்துக்களை எழுத்து மூலம் அக்டோபர் 1ந்தேதிக்குள் தரவேண்டும் என நிர்வாகம் அனைத்து பொதுச்செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

Friday, September 21, 2012


20-09-2012 அன்று மதிய உணவு இடைவேளையில் GM அலுவலகம் முன்பாக சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வை திரும்ப்ப் பெறக் கோரியும்  , கேஸ் சிலிண்டரின் எண்ணிக்கையில் கட்டுப்பாட்டை நீக்க கோரியும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் தோழர்.K.முருகேசன் ( மாவட்டச் செயலர் NFTE ) தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் / மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் சூரியன் (BSNLEU), சந்திரசேகர் (SNEA), அருணாசலம் (AIBSNLEA), முத்துக்குமார் (FNTO), முருகன் (TEPU), பாலகுமார் (AIGEOTA), அழகுபாண்டியராஜா (SNATTA) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

18-09-2012 அன்று மதிய உணவு இடைவேளையில் GM அலுவலகம் முன்பாக ITS Absorbtion பிரச்னையில் நிர்வாகம் காட்டும் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் அனைத்துச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் தோழர்.K.முருகேசன் (மாவட்டச் செயலர் NFTE  ) தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் தோழர்கள் சூரியன் (BSNLEU), சந்திரசேகர் (SNEA), கருப்பையா (AIBSNLEA), முருகன் (TEPU), பாலகுமார் (AIGEOTA), குருசாமி (SEWA) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Thursday, September 13, 2012

  • TTA பயிற்சி வகுப்புகள் வரும் 17-09-2012, 24-09-2012  ஆகிய தினங்களில் மீனம்பாக்கம் ட்ரெயினிங் சென்டரில் 2 பேட்ச்களும் 01-10-2012 அன்று 2 பேட்ச்கள் மறைமலை நகர் ட்ரெயினிங் சென்ட்ரிலும் தொடங்க உள்ளது.
முயற்சி எடுத்த மாநிலச் சங்கத்திற்கும் மத்திய சங்கத்திற்கும் நன்றி!
தியாகத் தலைவனுக்கு அஞ்சலி:
 விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவரும், இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஏ.எம். கோபு, தனது 82 வது வயதில் சென்னை விஜயா மருத்துவமனையில் காலமானார்.
மறைந்த புகழ் மிகுந்த தோழர், ஏ.எம்.கோபு அவர்களுக்கு NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பிலும்  உறுப்பினர்களின் சார்பிலும் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
போர்க்குணமும், அர்ப்பணிப்பு மிகுந்த தியாகமும் கொண்ட கோபு  மாணவர், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று அனைத்து பகுதி மக்களுக்காகவும் தலைமை பொறுப்பு ஏற்று செயல்பட்டிருக்கிறார். இவர் பங்கேற்காத போராட்டங்களும் இல்லை. காலடி படாத தமிழ் நாட்டின் நிலப்பகுதியும் இல்லை.
தியாக, வாழ்க்கை சிறப்பைக் கொண்ட கோபு,  கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டக் காலத்தில், கொலைக் குற்றம் சாட்டப் பெற்று, காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர்.
திருவாரூரில் சுடப்பட்டு, ஒரு ஆண்டு பாதுகாப்பு கைதியாக, திருச்சி மத்திய சிறைச்சாலையிலும், மூன்று ஆண்டுகாலம் சேலம் மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
தோழர்கள் ஜீவா, எம்.கல்யாணசுந்தரம், ப.மாணிக்கம், ஏ.எஸ்.கே முதலான தலைவர்களோடு உடன் இருந்து பணியாற்றிய சிறப்பையும் பெற்றுள்ளார். ஓய்வு ஒழிச்சலற்ற கோபுவின் கட்சிக்கானப் பணி வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதன்று.
தமிழகத்தில் தொழிற் சங்கத்தைக் கட்டி அமைத்ததில் கோபுவின் பங்கு குறிப்பிட்டு சொல்லத்தக்கதாகும்.
AITUC தொழற்சங்கத்தில் மாநிலத்தின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தின் துணைத் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல், பணியாற்றியுள்ளார். இந்த காலத்தில் 98 நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
பலவேறு தொழிற் சங்கப்போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்று தந்துள்ளார்.

அவரின் உடல்  தோழர்களின் / மக்களின் அஞ்சலிக்குப்பிறகு அவரது  விருப்பப்படி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும்.