Saturday, November 29, 2014

29-11-2014 அன்று மதுரையில் STR-STP சென்னை மற்றும் தமிழ்நாடு மாவட்டச் சங்கங்களின் இணைப்பு மாநாடு தோழர்கள் V.P.காத்தபெருமாள், S.M.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.தோழர்கள் சுந்தர்பாபு,ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். தோழர் அருணாசலம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தோழர். சேது மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.AIBSNLEA மாநிலச் செயலர் தோழர்.A.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து தோழர்கள் P.காமராஜ்,  மத்திய சஙக சிறப்பு அழைப்பாளர், புதுவை, மனோகரன், மாநில துணைத்தலைவர், திருச்சி
விஜயரங்கன்,மாநில அமைப்புச் செயலர், திண்டுக்கல், பரிமளம், மாநில துணைத் தலைவர்,
அல்லிராஜா, மாவட்டச் செயலர், வேலூர்,சிவகுருநாதன், மாவட்டச் செயலர்,மதுரை
முருகேசன், மாவட்டத் தலைவர், மதுரை வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலச் செயலர் தோழர். பட்டாபி சிறப்புரையாற்றினார்.
தோழர். ஆர்.கே நிறைவுப் பேருரையாற்ற
தோழர். மோகன்குமார் நன்றி கூற மாநாடு சிறப்புடன் முடிவடைந்தது.
புதிய நிர்வாகிகளாக தோழர்.P.ராஜகோபால் , R.அன்பழகன், S..M.கோவிந்தராஜன் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 













No comments:

Post a Comment