Monday, January 27, 2014

விருதுநகர் மாவட்ட மாநாடு

விருதுநகர் மாவட்ட மாநாடு 25/01/14 அன்று இராஜபாளையத்தில் மாவட்டத் தலைவர் தோழர்.M.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழர்கள் திட்டமிட்டுக்குவிந்ததால் இராஜபாளையம் மினி மதுரையாக  காட்சியளித்தது.

மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.லிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தோழர்.அழகர்சாமி,
முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் தோழர். இராமசாமி,

பொதுமேலாளர் திருமதி.இராஜம் மற்றும் அதிகாரிகள்

சம்மேளனச் செயலர் தோழர்.ஜெயராமன்,
மாநிலப் பொருளாளர் தோழர்.அசோக்ராஜ்,
மாநிலத் துணைச் செயலர் தோழர்.சுப்ப்ராயன்,
மதுரை மாவட்டச் செயலர் தோழர்.சிவகுருநாதன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிர்வாகிகள் தேர்வில் ஒருமித்த கருத்து உருவாக்கப்படாததால்
தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 

·        30/01/2014 அன்று புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் விருதுநகர் மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெறும். 

·        மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்.மாரி(காரைக்குடி)  மற்றும்  தோழர். அசோக்ராஜ்(புதுச்சேரி)
ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள்.

விறுவிறுப்பான காரம் நிறைந்த விருதுநகரில்.. 
ஊழியர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து 
அவர்களை மகிழ்வித்திடும் மத்தாப்பாக..
கேளாச்செவியான நிர்வாகத்தின் செவிப்பறையைப்பிளந்திடும் 
சிவகாசிப்பட்டாசாக..
புதிய தலைமை.. வந்திட.. வென்றிட..
வாழ்த்துகின்றோம்..
 

No comments:

Post a Comment