Thursday, January 24, 2013

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான அறிக்கையை நீதிபதி வர்மா தலைமையிலான குழு 23-01-2013 அன்று உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
  • பாலியல் கொடுமைக்கு உடல்ரீதியாக ஆளாகும்போது தற்காப்புக்காக தடுக்கும் உரிமையை வழங்குவதற்காக இந்திய தண்டனைச் சட்டம் 100வது பிரிவில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

  • பெண்களுக்கு எதிரான வன்முறையின்போது சட்டத்தை மீறுவோரையும் அதைத்தடுப்பதற்கு சட்ட ரீதியான கடமையை செய்யத் தவறிய அரசு அலுவலர்களுக்கும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

  • பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

No comments:

Post a Comment