Thursday, December 6, 2012


டிசம்பர் 6 : டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரது பொன்மொழிகளை கடைப்பிடிக்க உறுதியேற்போம்.

·        முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம்முன்னேற்றத்தில் சிரத்தைசிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.
·        நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு;இரண்டாவது தெய்வம் சுயமரியாதைமூன்றாவது தெய்வம்நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
·        வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும்பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும்நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
·        எவனொருவன் தானே சரணடையாமல்மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல்எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன். 

No comments:

Post a Comment