Saturday, November 17, 2012

  • 78.2% IDA ஊதிய நிர்ணயம்:
       DOT கேட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை BSNL  
       கார்ப்ரேட் அலுவலகம் 15ந்தேதி DOTக்கு
      அனுப்பியுள்ளது. 


  • JAO Part-II தேர்வு குறித்த தேதிகளில் நடைபெறும்.

Friday, November 16, 2012

  • புதிய அங்கீகார விதிகள்:
     BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான 2வது கூட்டம் வரும் 19-11-2012 அன்று டெல்லியில் மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

Monday, November 12, 2012

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்


தீபாவளி என்பது அரக்கனை அழித்த திருநாள் என்கிறது புராணம்.

இந்தப் பண்டிகை மனிதர்களுக்கு சொல்லும் செய்தி,நம் மனதிலிருக்கும் அரக்க குணங்கள், விலங்கு குணங்கள், தீய எண்ணங்கள் போன்ற இருளை அகற்றி.. அன்பு, வாய்மை போன்ற நல்ல குணங்களை மனங்களில் இருத்தினால், ஒளிமயமான வாழ்வு வாழலாம் என்பதுதான்!

அதுதான் இப்பண்டிகையின் அடிப்படை சித்தாந்தம்.

Monday, November 5, 2012


வெற்றிகரமாக நடந்து முடிந்த 6நாள் தொடர் உண்ணாவிரதம் 

  • BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகளை உடனடியாக BSNLஐ விட்டு வெளியேற்ற வேண்டும்.
அல்லது
  • BSNLல் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் ஊழியர்களையும் திரும்பவும் மத்திய அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 
 FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக நடைபெற்ற 6வது நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் வெற்றிகரமாக  நடைபெற்றது. அனைத்துச் சங்கங்களிலிருந்தும் பெருவாரியான தோழர்கள்,தோழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

  

Tuesday, October 30, 2012

BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகளை உடனடியாக BSNLஐ விட்டு வெளியேற்ற வேண்டும்.
அல்லது
BSNLல் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் ஊழியர்களையும்  மத்திய அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 

30-10-2012 அன்று FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக 2வது நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் தல்லாகுளம் Level IV  வளாகத்தில்  நடைபெற்றது

தோழர். K.முருகேசன் தலைமையேற்க தோழர் N.அழகர்சாமி துவக்கி வைக்க, தோழர்கள். செல்வின் சத்தியராஜ், G.P.பாஸ்கரன், M.சந்திரசேகரன்,  குருசாமி,V.K.பரமசிவம், அருணாசலம், கருப்பையா, அருணோதயம், வைரமதி, சுந்தரராஜன், செல்லப்பாண்டியன்(TEPU )  சூரியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இன்று (30-10-2012) மதியம் 12 மணிக்கு மாண்புமிகு அமைச்சர் கபில்சிபல் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கையில் தீர்வு ஏற்படவில்லை. அதனால் போராட்டம் தொடர்கிறது






Tuesday, October 16, 2012

16-10-2012 அன்று மதியம் 1 மணிக்கு GM அலுவலகம் முன்பாக தொடர் மின்வெட்டைக் கண்டித்தும் குறைந்த பட்ச போனஸ் வழங்கக்கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. GM அலுவலகக் கிளைச்செயலர் மெஹ்ராஜூதீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் BSNL நிர்வாகத்தைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


15-10-2012 அன்று FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக தர்ணா போராட்டம் GM அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
தோழர். K.முருகேசன் DS/NFTE தலைமையேற்க தோழர் N.அழகர்சாமி ACS/SNEA துவக்கி வைக்க, தோழர்கள். அ. அருணாசலம்,N.V.சந்திரசேகர் /AIBSNLEA,V.பாலகுமார்,விஜய்பாபு/AIGETOA , S.சூரியன் கன்வீனர்,செல்வின் சத்தியராஜ்/BSNLEU M.சந்திரசேகரன்/SNEA, G.P.பாஸ்கரன்,L.கண்ணன், V.சூரப்பன்,M.சுந்தரம்,தோழியர்கள் உமா, அருணோதயம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்..தோழர்.V.K.P/AIBSNLEA நிறைவுரை ஆற்றினார். தோழர்.சு.கருப்பையா DS/AIBSNLEA நன்றியுரையாற்றினார்.

Saturday, October 13, 2012

IDA உயர்வு:

01-10-2012 முதல் 5.8% IDA உயர்வுக்கான உத்தரவு

வெளியிடப்பட்டுள்ளது.

2012 அக்டோபர்  மாத சம்பளத்தில் IDA 67.3%